சூர தேங்கா

கோவிலில் கடவுளிடம் வேண்டுதல் வைக்கிறோம் பெரியோர்கள் வேண்டுதல் நிறைவேற காணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். தேங்காய் உடைக்கச் சொல்வார்கள், தீபம் ஏற்ற செயல்வார்கள், அபிஷேகம் செய்ய சொல்வார்கள்.

அதில் பிரதானமான “தேங்காய் உடைக்கும்” வழக்கத்தில் உள்ள சூட்சுமங்களை தெரிந்துகொண்டால், மற்ற வழிபாட்டு முறைகளின் சூட்சுமங்களின் அடிப்படையும் புரிந்துகொள்ளலாம்.

தேங்காயின் ஓடு செவ்வாய் தன்மையான உறுதியும், கரடு முரடான மேற்பரப்பையும், சுக்கிர தன்மையான இனிப்பு சுவைகொண்ட இளநீரையும் ஒருங்கே கொண்டதாகும். ஆக, ஆண், பெண் தனமைகள் ஒருங்கே இருப்பதனால் அங்கே ஒரு புதிய ஆற்றல் உண்டாகிறது.

எந்த ஒரு செயல் நடக்க வேண்டுமென்றாலும் அதற்க்கு ஆற்றல் தேவை, நமது கவலை தீரவும், வழிகாட்டவும் ஆற்றல் தேவை! நம் கடவுள் ஆற்றலிடம், நமக்கு வழிக்காட்டும்படியும், கவலைகளை தீர்க்கும்படியும் வேண்டுகிறோம். நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கு கடவுளின் ஆற்றல் பயன்படுத்துகிறோம், நமது தேவை நிறைவேறிய பின்பு அந்த ஆற்றலை திரும்பிச் செலுத்துவதே நேர்த்திக்கடன் என்று அழைக்கடப்படுகிறது.

நமது தேவை நிறைவேறியவுடன், தேங்காய் உடைப்பதன் மூலம் அதில் உள்ள ஆற்றலை கடவுளுக்கு மீண்டும் அற்ப்பணிக்கிறோம்.

இது தான் நாம் தேங்காய் உடைத்து வழிபடும் நோக்கம். மற்ற வழிப்பாட்டு நெறிகளும் இது தான் அடிப்படை.

நமது தேவைக்கான ஆற்றலை கடனாக கொடுத்த இறைவனிடம், மீண்டும் நன்றியுடன் திருப்பி அளிப்பதே நேர்த்திக்கடன்.

சிவனும்🔺 சக்தியும்🔻

சேர்ந்தா மாசுடா !



சிவன் ஆண் தன்மையும் சக்தி பெண் தன்மையும் சேரும்போது அந்த இடத்தில் ஒரு சக்தி பரிமாற்றம் நடக்கிறது சமநிலை உண்டாகிறது, அல்லது புதிதாக இன்னொரு உயிர் உண்டாகிறது.

வேறெந்த பொருட்கள் செவ்வாய் (ஆண்) தன்மையும், சுக்கிரனின் பெண்தன்மையும் கொடுள்ளன?

விடை : தேங்காய். தேங்காயின் ஓடு தடிமனாக செவ்வாய் தன்மையும், உள்ளே இளநீர் இருப்பதால் சுக்கிர தன்மையும் கொண்டுள்ளது.

அந்த தேங்காயை தண்ணீரில் ஊற வைத்தால், அது முளைத்து தென்னம் பூவாக மாறி பின்பு
மரமாக வளரும். எனவே, தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, ​​அவை ஒரு மரக்கன்றை (புதிய பிறப்பு) உருவாக்குகின்றன. தெளிவாகச் சொல்லப் போனால், புதிய ஆற்றல் உருவாகிறது!

தென்னம் பூ, புதிய ஆற்றல் உருவாகிறது! பின்பு மரமாக வளரும்

இதை மறக்க வேண்டாம். அடுத்து வரும் முக்கிய செய்திகளுக்கு அடிப்படையே இது தான்!

தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது!
ஆண் மற்றும் பெண் தன்மை இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது! 

நீரும் நெருப்பும் 🚫 _____ நீரும் மலையும் ✅



ஆணில் இருந்து பெண் படைக்கப்பட்டாள்

ஆதியாகமம் (Genesis): அதிகாரம் 2:

வசனம் 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

வசனம் 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

வசனம் 23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

ஆதியாகமம்

Men are from Mars, Women are from Venus

ஆண்கள் செவ்வாய் கிரகத்தின் குணங்களான தர்க்கரீதியான சிந்தனை, சுதந்திரம், பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற கொண்டவர்கள்.

பெண்கள் சுக்கிர கிரகத்தின் உணர்ச்சிவயப்படுத்தல், பேணிக் காத்தல், உறவு சார்ந்த சிந்தனை கொண்டவர்கள்.

செவ்வாய் - கல், மலைப்பாங்கான பகுதிகள்

சுக்கிரன் - நீர், பாயும் தன்மை

ஆம் பெண்தன்மை ஆண்தன்மையில் இருந்து தான் உருவானது

தலை காவேரி - காவேரி நதி நீர் உருவாகும் இடம்


பெண் தன்மை கொண்ட நீர், ஆண் தன்மை கொண்ட மலையில் இருந்து வருகிறது

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இந்த சின்னம் வந்ததென்று புரிகிறதா?

பைபிளில் கடவுள் ஏன் ஆதாமின் விலா எலும்பை தேர்ந்தெடுத்தார் என்று புரிகிறதா?

அர்த்தநாரீஸ்வரர் கதை புரிகிறதா?